கூடுவாஞ்சேரி அருகே திரெளபதியம்மன் ஆலய கும்பாபிஷேகம் புதன்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே கால்வாய் கிராமத்தில் திரெளபதியம்மன் ஆலயம் உள்ளது.
இக்கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் மாலை ஆசார்யவர்ணம், அனுகிரஹம், பகவத், அக்னிபிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், பாலிகை பிரதிஷ்டை, பூர்ணாஹூதியுடன் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அன்று மாலை 5 மணிக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகத்தைத் தொடர்ந்து திரெளபதியம்மன், பஞ்சப் பாண்டவர்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா, புதன்கிழமை காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கியது. பின்னர் கன்யாபூஜை, சுமங்கலிபூஜை, தசதானபூஜை ஆகியன நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா பூர்ணாஹூதியாகி, மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

