செய்யூர் மின்நிலையத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பை விட குறைவான விலை நிர்ணயம் செய்த முடிவை கைவிட வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் விஸ்வநாதன் எம்.பி. ஆகியோரிடம் வியாழக்கிழமை (செப்டம்பர் 12) மனு கொடுக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு நிறுவனமான பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான, தமிழக கடலோர மின் கழகம் (கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட்) சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகாவில் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது.
இதற்காக செய்யூர், சித்தார்காடு, வெடால், கங்காதேவன் குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.
இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி அடுத்த ஓரிரு வாரத்தில் கிடைத்துவிடும் என்ற நிலையில் குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் இடத்துக்கு ரூ. 6.5 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய திட்டமிடல் வளர்ச்சிக் குழுமம் (என்.டி.பி.சி.) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் வெடால் கிராமப் பகுதி விவசாயிகள் பாலசுப்பிரமணியன், அகத்தீஸ்வரன், தனவந்தனன், செல்வராஜ், ஜோதி, ரவி, குமார், சின்னதுரை, மகாலிங்கம், தாமோதரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் தங்களது விளைநிலங்களுக்கு உரிய விலை கிடைத்தால்தான் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பி. விஸ்வநாதன் ஆகியோரை வியாழக்கிழமை (செப்டம்பர் 12) நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

