உத்தரமேரூர் புதுவாழ்வுத் திட்டமும், காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியும் இணைந்து செவ்வாய்க்கிழமை இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாமை நடத்தின.
பாலேஸ்வரம், ஆனம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற இம்முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.
புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர் வி.தனசேகர் முகாமை தொடங்கி வைத்தார். மீனாட்சியம்மாள் பாலிடெக்னிக் ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன், உதவித் திட்ட மேலாளர் சுபான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 180 பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
கண், இதயம், எலும்பு, மூட்டு வலி நோயாளிகள் 30 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இம் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தஅழுத்தம் பரிசோதிக்கப்பட்டு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
இம்முகாமுக்கான ஏற்பாடுகளை புதுவாழ்வு திட்ட பகுதி அணித் தலைவர் ஜே.மணிகண்டன், எஸ்.சுனில்குமார், கே.கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர். ஊராட்சிச் செயலர் பி.ஏழுமலை நன்றி கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

