ராஜீவ்காந்தியின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் சமூக நல்லிணக்க நாள் விழா மற்றும் நிறுவனத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா மைய
வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
÷விழாவுக்கு மையத்தின் துணைத்தலைவர் சி.ஆர்.கேசவன் தலைமை வகித்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் இணைச்செயலர் சுதீர்குமார் முன்னிலை வகித்தார்.
÷பிரதமரின் மக்கள் தொடர்பு கட்டமைப்பு மற்றும் புதுமைகள் துறையின் ஆலோசகரும் தேசிய புதுமைக் குழுவின் தலைவருமான சாம்பிட்ரோடா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
÷அவர் பேசுகையில், தற்போது கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக நாட்டில் உள்ள 2.50 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை தொடர்பு துறை மூலமாக இணைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், இந்த தொழில்நுட்ப வசதிகளை அரசுத் துறை நிறுவனங்கள் தற்போது செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார். ÷விழாவில் பங்கேற்ற அனைவரும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ராஜீவ்காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தின் பதிவாளர் ஜெயலட்சுமி, பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

