செங்கல்பட்டு, சதுரங்கப்பட்டினத்தில் பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்படும் சாலைப்பால கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் பி. விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் அவை விதி 377-இன் கீழ் அவர் தாக்கல் செய்த அறிக்கை:
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதிகளை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 58-இல் உள்ள சதுரங்கபட்டினம் வழியாக பக்கிங்காம் கால்வாய் கடந்து செல்கிறது.
இந்தக் கால்வாயில் இருந்த பாலம் 100 ஆண்டுகள் பழைமையானது என்பதால் அதை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட நபார்ட் அமைப்பின் ஊரகச் சாலைத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக 2010-ஆம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டு, கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தமும் ஏற்பட்டது.
கட்டுமானப் பணியை 2011-ஆம் ஆண்டு நவம்பருக்குள் முடிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் தாமதமாகி வருகின்றன.
பணியைக் கண்காணிக்க வேண்டிய துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பாலப் பணிக்காகப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே, நபார்டு அதிகாரிகள் உடனடியாக இப்பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

