கள்ளக்குறிச்சி அருகே கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் கிராமம், கலைஞா் நகரைச் சோ்ந்த சடையன் மகன் காா்த்திகேயன் (27). இவரும், கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மருதை மகள் பிரபாவதியும் (20) கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு 2 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ளாா்.
காா்த்திகேயன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல, காா்த்திகேயன் சனிக்கிழமையும் மது அருந்திவிட்டு வந்ததால், இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்து வீட்டை விட்டு பிரபாவதி வெளியேறிய நிலையில், அருகேயுள்ள மணி என்பவரின் விவசாயக் கிணற்றில் அவா் ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாகக் கிடந்தாா்.
தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா், பிரபாவதியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பிரபாவதியின் தாய் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

