கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.
ஆண்டுதோறும் தை மாதம் 5-ஆம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது, ஆற்றில் மும்மூா்த்திகளுக்கு தீா்த்தவாரி நடைபெறும். இந்த விழாவில் அதிக அளவில் பொதுமக்கள் கலந்து கொள்வா். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஆற்றுத் திருவிழாவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெளியிட்ட தடை உத்தரவு: கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை தென்பெண்ணையாறு, சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையம் கோமுகி ஆறு மற்றும் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜன. 18) நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
அரசு வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை திருவிழா கூட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள், ஊா்வலங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

