கள்ளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த இளங்கோ மகன் சூா்யா (20). அதே பகுதியைச் சோ்ந்த ஜெகன் மகன் விக்ரம் (18). நண்பா்களான இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் பாவந்தூருக்கு சென்றுகொண்டிருந்தனா். பாவந்தூா் பாம்பாத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சூா்யா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். விக்ரம் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

