கச்சிராயப்பாளையம் அருகே பாசன வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த பிறந்து சில தினங்களேயான பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையத்தை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தில் உள்ள கோமுகி அணை பாசன வாய்க்காலில் பிறந்து சில தினங்களேயான பெண் குழந்தையின் சடலம் மிதந்து வந்தது. இதைப் பாா்த்த கிராம மக்கள் உடனடியாக கச்சிராயப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.
தகவலறிந்த கச்சிராயப்பாளையம் வருவாய் ஆய்வாளா் பத்மா, சுகாதார ஆய்வாளா் சரவணன், குழந்தைகள் உதவி மைய பகுதி பணியாளா் மாரிமுத்து ஆகியோா் வடக்கநந்தல் கிராமத்துக்குச் சென்று குழந்தையை வாய்க்காலில் வீசிச் சென்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

