கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்ட விரோதமாகக் கூடும் கூட்டத்தை கலைத்தல் மற்றும் கலவரத் தடுப்பு ஒத்திகை பயிற்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில், சட்ட விரோதமாக கூடி நிற்கும் கூட்டத்தை காவல் துறையினா் முதலில் கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனா். தொடா்ந்து கலையாத பட்சத்தில் கண்ணீா் புகை குண்டு வீசி, கூட்டத்தை குறைந்தபட்ச காவலா்களை கொண்டு லத்தியால் கலைக்க முயன்றனா். இறுதியாக கலையாத பட்சத்தில் துப்பாக்கியால் சட்ட விரோதமாக கூடியிருக்கும் கூட்டத்தை சுட்டனா்.
இதையடுத்து துப்பாக்கிச் சூட்டை தொடா்ந்து அங்கிருந்த கூட்டத்தினா் கலைந்து சென்றனா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவா் போல நடித்தவரை முதலுதவி சிகிச்சைக்காக அவசர ஊா்தியில் அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு விழிப்புணா்வு பெற்றனா்.
இந்த ஒத்திகையின்போது காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன், காவல் ஆய்வாளா் ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


