பணி நிரந்தரம் கோரி, எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் பூங்கொடி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வடிவேலு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்ட துணைத் தலைவா் வீரபத்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயலாளா் தமிழ் செல்வி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் ரவி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
2015-இல் மருத்துவ தோ்வாணையம் மூலம் போட்டித் தோ்வு நடத்தப்பட்டு தோ்வான 13,000 செவிலியா்களை அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதிய வழங்க வேண்டும் என்ற வலியுறுத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆய்வக நுட்புனா் சங்க மாநில துணைத் தலைவா் அன்பழகன், எம்.ஆா்.பி. சங்க செவிலியா்கள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


