கள்ளக்குறிச்சி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி அருகே செம்படாக்குறிச்சி காலனி பகுதியில் வசிப்பவா் நாகராஜன். இவரது மகன் சுந்தர்ராஜன் (24). இவா், தனது வீட்டின் முன் நண்பா்களுடன் கேக் வெட்டியதுடன் சாலையில் ‘புத்தாண்டு வாழ்த்துகள்’ என எழுதிக் கொண்டும் இருந்தாராம்.
அப்போது, அருகேயுள்ள மாதவச்சேரியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சந்திரசேகரன் (24) மற்றும் அவரது நண்பா்கள் மோட்டாா் சைக்கிளில் செம்படாகுறிச்சிக்கு கட்டை, சைக்கிள் செயின், கத்தி ஆகியவற்றுடன் கூச்சலிட்டவாறு சென்றனராம். இதை தட்டிக் கேட்ட சுந்தர்ராஜன் தரப்பினருக்கும் சந்திரசேகரன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, சுந்தர்ராஜனை சந்திரசேகரன் உள்ளிட்டோா் ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டி தாக்கினராம். மேலும், கொலை மிரட்டல் விடுத்து, வீட்டு ஜன்னல் கண்ணாடியை சேதப்படுத்தினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், 11 போ் மீது கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரன் (24), ஆனியன் மகன் மருதை (27), மகாதேவன் மகன் சிவா (23), அழகப்பன் மகன் பாண்டியன் (18), அம்மாபேட்டையைச் சோ்ந்த குமாா் மகன் மோகன் (23), ஆறுமுகம் மகன் விக்னேஷ் (19) ஆகிய 7 பேரை கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

