கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல்போக்கு நிலவிய போது இந்திய ராணுவம் செயல்பட்ட விதம் நாட்டின் நன்மதிப்பை அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் 40 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் ரூ.425 கோடி செலவில் புதிய ராணுவ மருத்துவமனை கட்டப்படவுள்ளது. அதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்ன் பொன்விழா ஆண்டையொட்டி ஒட்டுமொத்த தேசத்துக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் போரில் இந்தியப் படைகள் வெளிபடுத்திய தீரம் தேசத்துக்கு அளவற்ற பெருமையை அளித்தது.
சமீபத்தில் கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் மோதல்போக்கு நிலவிய போது இந்திய ராணுவம் செயல்பட்ட விதம் நாட்டின் நன்மதிப்பை அதிகரித்து, குடிமக்களை தலைநிமிரச் செய்துள்ளது.
மேலும் 4 தடுப்பூசிகள்: தற்போது 2 கரோனா தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 4 தடுப்பூசிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு செலுத்தப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். ஏனெனில் இந்தியா தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் நாடு அல்ல. ஒட்டுமொத்த உலகம் மீதும் அக்கறை கொண்டுள்ள நாடு என்றாா் அவா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


