சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லியில் புதிதாக 246 பேருக்கு கரோனா

​தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 246 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2021, 9:57 pm


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 246 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 246 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,32,429 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 385 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 8 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,19,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் 10,746 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 2,544 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 10 நாள்கள் கிடைத்த தரவுகளின்படி இறப்பு விகிதம் 2.84 சதவிகிதமாக உள்ளது. பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.36 சதவிகிதம்.