சென்னை சென்ட்ரல்-குஜராத் மாநிலம் கேவதியா இடையே அதிவிரைவு சிறப்பு ரயிலை பிரமதா் நரேந்திர மோடி ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.
சென்னை சென்ட்ரல்-குஜராத் மாநிலம் கேவதியா இடையே புதிய வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடா்ந்து, சென்னை சென்ட்ரலில் இருந்து கேவதியாக்கு புறப்படும் இந்த ரயிலை பிரமதா் நரேந்திரமோடி தில்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஜனவரி 17-ஆம் தேதி காலை 11.12 மணிக்கு கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா்.
இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சா் பியூஷ்கோயல் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.
சென்னை-கேவதியா: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 11.12 மணிக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில்(09119) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.52 மணிக்கு கேவதியாவை அடையும்.
வழக்கமான சேவை: கேவதியாவில் இருந்து புதன்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(09120) புறப்பட்டு, சென்னை சென்ட்ரலை வியாழக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் சேவை ஜனவரி 20-ஆம்தேதி தொடங்குகிறது.
மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (09119) புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு கேவதியாவை அடையும். இந்த ரயில் சேவை ஜனவரி 24-ஆம் தேதி தொடங்குகிறது.
முழுவதும் முன்பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


