உலகளவில் பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்ததால், சிக்னல் சர்வர்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சிக்னல் செயலியைப் பயன்படுத்தி செல்லிடப்பேசி அல்லது கணினி வாயிலாக தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை என்று உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து சிக்னல் செயலி நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி, புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, லட்சக்கணக்கானோர் வாட்ஸ்ஆப்பை புறக்கணித்து டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளுக்கு மாறி வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் சிக்னல் செயலியை பதிவிறக்கம் செய்ததால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், கூடுதல் சர்வர்கள் இணைக்கப்பட்டு, திறனை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வாட்ஸ்ஆப் செயலி, தனது புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் கால அவகாசத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


