ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் ராஜஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்வர் அசோக் கெலாட் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் பேசிய அவர், ''இந்த நாளுக்காக தான் அனைவரும் காத்திருந்தோம். இறுதியாக கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ராஜஸ்தானில் 167 மையங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.
ஒவ்வொரு நபருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அரையாண்டுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதுவரை அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்'' என்று கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


