கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
உலகின் மிகப்பெரிதான கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை காலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடும் மொத்தம் உள்ள மூவாயிரத்து ஆறு மையங்களும் இணையவழியில் இணைக்கப்பட்டது.
தொடக்க நாளான சனிக்கிழமை ஒவ்வொரு மையத்திலும் தொடக்க நாளில் 100 பயனாளிகள் வீதம் 3 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்னுரிமை பிரிவினராக தெரிவு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. கரோனா நோய்த்தொற்று தடுப்பூசி நடைமுறை கோ-வின் மென்பொருள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் 1 0 7 5 - கட்டணமில்லா தொலைபேசி மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல் கரோனா தடுப்பூசியானது மருத்துவர் சங்க மாநிலத் தலைவரும், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவரான செந்திலுக்கு செலுத்தப்பட்டது.
கர்ப்பிணிகள், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும், மற்ற தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கும் 14 நாள்கள் கால இடைவெளி அவசியம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


