வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாஜக மற்றும அதன் கூட்டணிக் கட்சியான ஜேஜேபி கட்சியினர் நுழைய 60 கிராம மக்கள் தடை விதித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான தில்லியில் நடந்து வரும் போராட்டமானது 50 நாள்களை நெருங்கி உள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜேஜேபியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை தங்களது கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து ஹரியாணாவைச் சேர்ந்த 60 கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
முன்னதாக கடந்த ஜனவரி 10 ஆம் தேதி, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் பங்கேற்க இருந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான பொதுக்கூட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


