ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப் பகுதியில் தற்போது கடுங்குளிர் வாட்டி வருகிறது. ஸ்ரீநகர் பகுதியில் - ஜம்மு - காஷ்மீரின் கோடைக்கால தலைநகர் - இன்று கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த குளிர்நிலை நிலவுகிறது.
ஸ்ரீநகரில் இன்று குளிர்நிலை மைனஸ் 7.8 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பதிவாகியுள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத குளிர்நிலை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே குளிர்நிலை கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் எல்லைப் பகுதியின் மற்றப் பகுதிகளிலும் கடுமையான குளிர்நிலையே நிலவுகிறது.
அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் முகாமாக செயல்படும் பஹல்காம் சுற்றுலாத் தலம் பகுதியில் இன்று மைனஸ் 11.7 டிகிரி செல்சியஸ் குளிர்நிலை பதிவாகியுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


