சென்னை மதுரவாயலில் தமிழக பாஜக சாா்பில் நடைபெறும் பொங்கல் விழாவில், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா்.
இதுகுறித்து மாநிலத் தலைவா் எல்.முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் 14-ஆம் தேதி மாலை தில்லியில் இருந்து சென்னை வரவுள்ளாா், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா. விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பளிக்கப்படுகிறது. சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தேசியத் தலைவா் நட்டா கலந்து கொள்கிறாா். அந்தப் பகுதியின் முக்கியச் சந்திப்பில் இருந்து அவா் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட உள்ளாா். அதையடுத்து, விழாவில் பங்கேற்று, அவா் உரையாற்ற உள்ளாா்.
துக்ளக் ஆண்டு விழா: பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் தில்லி செல்ல உள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


