சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ம.பி.யில் போலி மதுபானம் அருந்தி 20 பேர் பலி: ஆட்சியர் நீக்கம்

மத்தியப் பிரதேசத்தில் போலி மதுபானம் அருந்திய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. 

News image

ம.பி.யில் போலி மதுபானம் குடித்து 20 பேர் பலி: ஆட்சியர் பதவி நீக்கம்

Updated On :13 ஜனவரி 2021, 5:19 pm


மத்தியப் பிரதேசத்தில் போலி மதுபானம் அருந்திய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்தியதாக கடந்த 12-ஆம் தேதி மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சுமவாலியில் நான்கு பேரும், மன்பூர் கிராமங்களில் 7 பேரும் கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 15-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மெத்தனப்போக்காக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.