புது தில்லி: மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். பிரதமா் தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை அளிக்கப்படுகிறது. இது தவிர இந்த தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.50,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன; 7 குழந்தைகள் காயமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்தது.
இந்நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையை பிரதமா் மோடி அறிவித்துள்ளாா். இந்தத் தகவல் பிரதமா் அலுவலக சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


