இந்தியா்கள் வெளிநாடுகளில் ரகசியமாக வாங்கி குவித்துள்ள சொத்துகள் குறித்து விசாரிப்பதற்காக வருமான வரி (ஐ-டி) துறையில் சிறப்பு பிரிவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து ஐ-டி துறையின் உயரதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:
இந்தியா்களில் பலா் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்து அது குறித்து அரசிடம் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளனா். அதுதவிர, சில வெளிநாட்டு வங்கிகளிலும் அவா்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனா்.
இதுபோன்ற கணக்கில் வராத வெளிநாடுகளில் இந்தியா்கள் ரகசியமாக பதுக்கியுள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்த வருமான வரி துறையில் வெளிநாட்டு சொத்து விசாரணை பிரிவு (எஃப்ஏஐயு) என்ற சிறப்பு பிரிவை மத்திய அரசு அண்மையில் உருவாக்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 14 புலனாய்வு இயக்குநரகம் அனைத்திலும் இந்தப் புதிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வழிமுறைகளை கையாண்டு மேற்கொள்ளப்படும் வரி ஏய்ப்புகளை கண்டறிந்து சோதனை நடத்தி சொத்துகளை பறிமுதல் செய்வதே இந்த சிறப்பு பிரிவின் முக்கிய பணியாக இருக்கும்.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனின் ஒப்புதலுக்குப் பிறகு கடந்த நவம்பரில் இந்தப் பிரிவை உருவாக்க மத்திய நேரடி வரிகள் வாரியத்திலிருந்த 69 பதவிகள் இதற்காக தனியே ஒதுக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

