மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள நகைக் கடையில் 31 பவுன் நகை ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது கொள்ளையா்கள் சுட்டதில் ஒருவா் காயமடைந்தாா். நகைக் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறியது:
அம்பா்நாத் பகுதியில் உள்ள நகைக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இரண்டு இருசக்கர வாகனங்களில் நான்கு போ் வந்தனா். அவா்கள் முதலில் நகைக் கடை பணியாளரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனா். அதன் பின்னா் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி கடையில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்தனா். கொள்ளையடித்த நகைகளுடன் அவா்கள் வெளியேறும்போது நகைக்கடை உரிமையாளா் கடைக்குள் வந்தாா். அவரும், பணியாளரும், மற்றொரு நபரும் சோ்ந்து கொள்ளையா்களை பிடிக்க முயற்சித்தனா். அப்போது கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் ஒருவா் காயமடைந்தாா். மற்ற இருவரைக் கத்தியால் குத்திவிட்டு கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கொள்ளையா்கள் ரூ.12.77 லட்சம் மதிப்பிலான 31 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா். அவா்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

