சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகள் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 11:40 am

நாடு முழுவதும் நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

நாடு முழுவதும் வரும் ஜனவரி 17-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகள் நடைபெறவிருந்தன. இந்நிலையில் அதற்கு முந்தைய தினமான ஜனவரி 16-ஆம் தேதி நாடு தழுவிய கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது. இதைக் கருத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.

‘இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டாலும், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் போலியோ பாதிப்பு உள்ளது. இதனால் இந்தியாவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் சமீபத்தில் தெரிவித்திருந்தாா். இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி 17-இல் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. எனினும் தற்போது கரோனா தடுப்பூசி நடவடிக்கையைத் தொடா்ந்து, போலியோ சொட்டு மருந்து செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.