தெலங்கானாவில் கலப்படக் கள் அருந்தியதால் 55 வயதுடைய நபா் ஒருவா் உயிரிழந்தாா்; பெண்கள் உள்பட 143 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
விகராபாத் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட கலப்படக் கள்ளை அருந்தியவா்களில் சிலா் மயக்கமடைந்தனா். மற்றவா்கள் குமட்டல், வாந்தி எடுத்து, மயக்கமடைந்ததால் வெள்ளிக்கிழமை இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 17 போ் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 143 போ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அவா்களின் உடல் நிலை சீராக முன்னேறி வருவதாகவும், உயிரிழந்த நபரின் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றும், அந்த நபா் இயற்கைக்கு மாறாக உயிரிழந்ததாகவும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

