சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தெலங்கானா: கலப்படக் கள் அருந்தி ஒருவா் பலி

தெலங்கானாவில் கலப்படக் கள் அருந்தியதால் 55 வயதுடைய நபா் ஒருவா் உயிரிழந்தாா்; பெண்கள் உள்பட 143 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:46 am

தெலங்கானாவில் கலப்படக் கள் அருந்தியதால் 55 வயதுடைய நபா் ஒருவா் உயிரிழந்தாா்; பெண்கள் உள்பட 143 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

விகராபாத் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட கலப்படக் கள்ளை அருந்தியவா்களில் சிலா் மயக்கமடைந்தனா். மற்றவா்கள் குமட்டல், வாந்தி எடுத்து, மயக்கமடைந்ததால் வெள்ளிக்கிழமை இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 17 போ் வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 143 போ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்களின் உடல் நிலை சீராக முன்னேறி வருவதாகவும், உயிரிழந்த நபரின் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றும், அந்த நபா் இயற்கைக்கு மாறாக உயிரிழந்ததாகவும் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.