பஞ்சாப் மாநிலத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமண ஊர்வலத்தின்போது போராட்டக் களத்தில் சிறிது நேரம் பங்கேற்று, பின்னர் திருமண வீட்டார் திருமண நிகழ்வைத் தொடர்ந்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆதரவு பெறுகி வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் விவசாயிகளுடான போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாபில் வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அரை மணிநேரம் பங்கேற்று பின்னர் திருமண நிகழ்வைத் தொடர்ந்தனர்.
இது தொடர்பாக பேசிய மணமகன் ஜெகதீப் சிங், ''நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்ததால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது'' என்று கூறினார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

