சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற திருமண வீட்டார்

பஞ்சாப் மாநிலத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற திருமண வீட்டார்

Updated On :10 ஜனவரி 2021, 9:22 pm

பஞ்சாப் மாநிலத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமண ஊர்வலத்தின்போது போராட்டக் களத்தில் சிறிது நேரம் பங்கேற்று, பின்னர் திருமண வீட்டார் திருமண நிகழ்வைத் தொடர்ந்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆதரவு பெறுகி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் விவசாயிகளுடான போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பஞ்சாபில் வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அரை மணிநேரம் பங்கேற்று பின்னர் திருமண நிகழ்வைத் தொடர்ந்தனர்.

இது தொடர்பாக பேசிய மணமகன் ஜெகதீப் சிங், ''நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்ததால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது'' என்று கூறினார்.