கேரளத்தில் இன்று மேலும் 4,545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,545 பேருக்கு கரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,11,148 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 23 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3,302ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 4,659 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,43,467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 64,179 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,03,935 கண்காணிப்பில் உள்ள நிலையில் 441 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 45,695 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


