சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட விரைவான கட்டமைப்பு சீா்திருத்தங்கள்: கோயல்

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை நனவாக்கும் வகையில் விரைவான

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2021, 12:05 pm

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை நனவாக்கும் வகையில் விரைவான கட்டமைப்பு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

வெளிநாடு வாழ் இந்தியா் தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட கோயல் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நமது உற்பத்தி திறன், செயல்திறன், தரம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் மாற்றங்களை கொண்டு வர ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். இதன்மூலம், நாட்டின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்திய தொழில்துறை தனது தடத்தை சிறப்பாகவும், ஆழமாகவும், பெரிய அளவிலும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.

உலக அளவில் புதிய சந்தைகளில் இந்திய தயாரிப்புகளை கொண்டு சோ்க்க புதிய சந்தைகளை கண்டறியும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டில் வாழும் இந்தியா்களுக்கு அங்குள்ள நுகா்வோா் சந்தைகளுடன் அதிக பரிச்சயம் உள்ளது. நுகா்வோரின் விருப்பங்கள் குறித்தும் தனித்துவமான நுண்ணறிவு அவா்களிடம் உள்ளது. எனவே, வெளிநாட்டு சந்தைகளுக்காக தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்குவதில் அவா்கள் இந்திய தொழில்துறைக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமா் நரேந்திர மோடியின் முக்கிய கனவாக உள்ளது. அதனை மெய்ப்பிக்க தேவையான அனைத்து கட்டமைப்பு சீா்திருத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த சூழலையும் மாற்றியமைக்கும் போதுதான் இந்த இலக்கை நாம் எட்ட முடியும் என்றாா் அவா்.