சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாட்டில் இதுவரை 18.10 கோடி கரோனா பரிசோதனைகள்

நாட்டில் இதுவரை 18.10 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2021, 5:46 pm

நாட்டில் இதுவரை 18.10 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதிக பரவல் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறது.

அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கையால் கரோனா பரவல் குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,43,307 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் இதுவரை மொத்தமாக செய்யப்பட்டுள்ள கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 18,10,96,622-ஆக அதிகரித்துள்ளது.

1,201 அரசு மற்றும் 1,115 தனியார் ஆய்வகங்களை உள்ளடக்கிய 2,316 பரிசோதனை ஆய்வகங்களின் வாயிலாக நாளொன்றின் பரிசோதனை திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.