உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள வெளிநாடுகள் உடனான விமானச் சேவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரியுள்ளனா்.
இதுகுறித்து லோக்கல்சா்க்கிள்ஸ் ஆன்லைன் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:
உருமாற்றம் கண்ட புதிய வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் வெளிநாட்டு விமான சேவையின் தேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் 207 மாவட்டங்களில் உள்ள 8,000 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பதிலை தெரிவித்துள்ளனா்.
அவா்களில் பெரும்பாலானோா், புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நாடுகளுடனான விமான சேவையை இந்தியா தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டிருந்த பிரிட்டனுக்கான விமான சேவையை கடும் கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ள மத்திய அரசின் நோக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே கருத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் தெரிவித்துள்ளாா். அதன்படி, நாட்டில் கரோனா அபாயம் இன்னும் நீங்காத நிலையில் இந்திய மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவையை வரும் ஜனவரி 31-வரையில் நிறுத்தி வைக்க வேண்டும் என கேஜரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

