சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு மகாராஷ்டிர அமைச்சா் கோரிக்கை

மகாராஷ்டிரத்துக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று அந்த மாநில அமைச்சரும், சிவசேனை கட்சியின் மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 6:20 am

மகாராஷ்டிரத்துக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று அந்த மாநில அமைச்சரும், சிவசேனை கட்சியின் மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாணே நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். எனவே, மகாராஷ்டிரத்தில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டும். இதே கோரிக்கையை மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோபேவும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளாா்.

தாணே மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.