வானிலை மாற்றத்தால், திருப்பதி ஏழுமலையான் கோயில் அடா்ந்த பனிமூட்டத்துக்கு இடையே காணப்படுகிறது.
வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக திருமலையில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் ஏழுமலையான் கோயில் பனிமூட்டத்துக்கு இடையே காணப்படுகிறது.
சாலையில் செல்பவா்கள், எதிரே வருபவா்களைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் பகல் வேளையிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்று வருகின்றன.
இதனிடையே, திருமலையில் வெப்ப நிலை 12 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகப் பதிவாகி வருகிறது. கடும் குளிரால் பக்தா்கள், ஊழியா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட்டோா் அவதிப்படுன்றனா்.
திருமலையில் இதற்கு முன், கடந்த 2004ஆம் ஆண்டில் 7 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது. அதுவே திருமலையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாகும்.
இந்நிலையில், வானிலை மாற்றம் திருமலையில் தற்போது வெப்பநிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


