மேற்கு வங்கத்தில் திரையரங்கில் 100 சதவிகிதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
எனினும் திரையரங்குகளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா 2021-ல் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர், கரோனா பெருந்தொற்றால் 50 சதவிகித ரசிகர்களுக்கு மட்டுமே திரையரங்கில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது திரையரங்கில் 100 சதவிகிதம் ரசிகர்களை அனுமதிக்கலாம். ஆனால் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
ஏற்கெனவே தமிழகத்தில் திரையரங்கில் 100 சதவிகிதம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு மத்திய அரசின் கரோனா கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாக உள்துறை செயலாளர் அஜய், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


