சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜன. 16-ல் இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது: மோடி

கரோனா தொற்றுக்கு எதிராக ஜனவரி 16-ஆம் தேதி இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

Updated On :10 ஜனவரி 2021, 12:09 am

கரோனா தொற்றுக்கு எதிராக ஜனவரி 16-ஆம் தேதி இந்தியா முக்கிய அடியெடுத்து வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ''கரோனாவுக்கு எதிராக இந்தியா வரும் 16-ஆம் தேதி முக்கிய அடியெடுத்து வைக்கிறது. அந்த நாள் முதல் இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.