மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பர்தமன் மாவட்டத்தில் நட்டா சனிக்கிழமை தெரிவித்தது.
"கடந்த முறை நான் வந்தபோது நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியின் திட்டத்தின்படி தாக்குதலுக்குள்ளானோம். இதை நாடே பார்த்தது. மத்திய உள்துறை அமைச்சகம் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டது. இன்று நான் மீண்டும் வந்துள்ளேன். இதுவரை பயணம் நன்றாக இருக்கிறது.
ஆளும் கட்சி குற்ற உள்ளுணர்வுடன் செயல்பட்டு வருகிறது. ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. என்னைப் போன்ற பாதுகாவலர் மீதான தாக்குதல்தான் சாதாரண குடிமக்களுக்கான சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை" என்றார்.
கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்த பிரதமர் மோடியின் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்பாரா என்று கேள்வி எழுப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், 'மம்தா என்ன செய்யப்போகிறார் என்று அவர் சார்பாக நான் எப்படி பதில் கூற முடியும். நல்ல எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன். மேற்கு வங்க மக்களின் நலனைக் காட்டிலும் தனது ஈகோவிற்கு மம்தா முக்கியத்துவம் அளிக்கக் கூடாது." என்றார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


