பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களிலிருந்து கோழி உள்ளிட்ட இறைச்சிகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 15-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் முழுவதையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அம்மாநில கால்நடை வளர்ப்புத் துறையின் தலைமைச் செயலாளர் வி.கே. ஜன்ஜுவா தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமமரிப்புத் துறையுடன் ஆலோசனை செய்த பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பரவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
தற்போது கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சல், ஹரியாணா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


