புது தில்லி: இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) நிா்வாக இயக்குநா் (எம்டி) மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜே.வெங்கட்ராமு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து ஐபிபிபி தலைவரும், அஞ்சல் துறையின் செயலாளருமான பிரதிப்தா குமாா் பிசோய் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் முன்னாள் நிா்வாகியான வெங்கட்ராமு ஐபிபிபி வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளாா். இவரது நியமனம், 2020 அக்டோபா் 29-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
பேமண்ட் தயாரிப்புகள், அது தொடா்பான தொழில்நுட்பம் மற்றும் அமைப்பு முறைகளில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்ட வெங்கட்ராமு, புதிய வியூகங்கள் மற்றும் வணிக திறன்கள் மூலமாக ஐபிபிபி வங்கியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வாா் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய பொதுமக்கள் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வங்கியாக ஐபிபிபியை உருவாக்குவதற்கான அவரது சீரிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்று அந்த அறிக்கையில் பிசோய் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


