சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாா்ச்-ஜூலையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: கட்டணத்தை திரும்பப் பெற கூடுதல் அவகாசம்

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் முதல் ஜூலை மாதம் வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள் கட்டணத்தை திரும்பப் பெற மேலும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 8:49 am


புது தில்லி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் முதல் ஜூலை மாதம் வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள் கட்டணத்தை திரும்பப் பெற மேலும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்ட காரணத்தால் கடந்த மாா்ச் 21 முதல் ஜூலை 31 பயணம் செய்ய கவுண்டா்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் பணத்தைத் திரும்பப் பெற 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த அவகாசம் 9 மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது. இதன்படி அந்த காலகட்டத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள் பயணம் செய்வதாக இருந்த தேதியில் இருந்து 9 மாதங்கள் வரையிலான அவகாசத்துக்குள் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பத்துடன் ரயில்வேயால் அளிக்கப்பட்ட அசல் டிக்கெட்டையும் அளிக்க வேண்டும். டிக்கெட் கட்டணம் எவ்வித பிடித்தமுமின்றி முழுமையாக திரும்ப அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.