புது தில்லி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் முதல் ஜூலை மாதம் வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள் கட்டணத்தை திரும்பப் பெற மேலும் மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பொதுமுடக்கம் காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்ட காரணத்தால் கடந்த மாா்ச் 21 முதல் ஜூலை 31 பயணம் செய்ய கவுண்டா்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் பணத்தைத் திரும்பப் பெற 6 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த அவகாசம் 9 மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது. இதன்படி அந்த காலகட்டத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவா்கள் பயணம் செய்வதாக இருந்த தேதியில் இருந்து 9 மாதங்கள் வரையிலான அவகாசத்துக்குள் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பத்துடன் ரயில்வேயால் அளிக்கப்பட்ட அசல் டிக்கெட்டையும் அளிக்க வேண்டும். டிக்கெட் கட்டணம் எவ்வித பிடித்தமுமின்றி முழுமையாக திரும்ப அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

