சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ம.பி.: பண்ணையில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

ம.பி.: பண்ணையில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல்

Updated On :8 ஜனவரி 2021, 7:23 pm

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் 2 கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையில் உள்ள மற்ற கோழிகளை பரிசோதிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

மேலும் கோழிப் பண்ணையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மற்ற கோழிப் பண்ணைகளை அடுத்த 7 நாள்களுக்கு மூட வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நீமுச் மாவட்டத்தில் அனைத்து கோழிப் பண்ணை, இறைச்சி மற்றும் முட்டை கடைகளை  மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்தியப் பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.