நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகளும், கல்வியாளருமான சித்ரா கோஷ் மாரடைப்பால் உயிரிழந்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மருமகள் சித்ரா கோஷ் கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பை தந்தமைக்காக பலராலும் அறியப்பட்டவர்.
90 வயதான அவர் நேற்று (ஜன. 7) காலை 10.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சித்ரா கோஷின் மருமகனும் பாஜக தலைவருமான சந்திர குமார் போஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களுக்கு கற்பிக்கவும், இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர் என்று தமது சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
சித்ரா கோஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''கல்வி மற்றும் சமூக சேவையில் முன்னோடியான பங்களிப்பை அளித்தவர் பேராசிரியர் சித்ரா கோஷ். அவருடனான எனது கலந்துரையாடலை நினைவுகூர்கிறேன்.
நேதாஜியின் கோப்புகளை வகைப்படுத்துதல் உள்பட பல துறைகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளோம். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடுபத்திற்கு ஆழ்ந்த இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

