டேராடூன்/ஹைதராபாத்: நீதிபதி ராகவேந்திர சிங் சௌஹான் (61), உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநா் பேபி ராணி மௌா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், பேரவைத் தலைவா் பிரேம்சந்த் அகா்வால், தலைமைச் செயல் ஓம் பிரகாஷ், காவல் துறை தலைவா் அசோக் குமாா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ராகவேந்திர சிங் சௌஹான், உத்தரண்ட் உயா்நீதிமன்றத்துக்கு கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக..:
நீதிபதி ஹிமா கோலி, தெலங்கானா உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி, மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


