வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெறுவதானால் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தட்டும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தில்லியில் 44-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று 8-வது கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
ஏற்கனவே 7 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று (ஜன. 8) மீண்டும் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனிடையே இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி பல்வீந்தர் சிங் ராஜூ, ''பிரிவு வாரியாக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. வேளாண் சட்டங்களை இன்றே திரும்பப் பெறுவதாக இருந்தால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வரட்டும்'' என்று கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியிn பல்வேறு எல்லைகளில் 44-வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


