பொதுவாக திருமணம் என்றால் பல விஷயங்கள் அது பற்றி பேசப்படும். மணப்பெண் அலங்காரம், அறுவை உணவு. ஆனால் இங்கே திருமணமே பேசுபொருளாக மாறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் மாவட்டத்தில், ஒரே மேடையில் தனது இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார் ஒரு இளைஞர்.
தன்னை மனதாரக் காதலித்த ஹசினா மற்றும் சுதாரி ஆகியோரை ஒரே மேடையில், இருவரின் சம்மதத்துடன் ஜனவரி 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார் சந்து மௌரியா என்ற இளைஞர்.
விவசாயியான சந்து மௌரியா, ஒரே மண்டபத்தில், ஒரே மேடையில், ஒருபோல சடங்குகள் செய்து இருவருக்கும் தாலி கட்டியுள்ளார்.
கிராமத்தில் விவசாயப் பணியின் போது சுதாரியாவும், திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஹசினாவும் சந்துவைப் பார்த்து காதலில் விழுந்துள்ளனர். இது ஒருவருக்கு ஒருவர் தெரிய வந்ததும் மனமொத்து மூன்று பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மூன்று பேரின் வீட்டாரும் சம்மதித்து திருமணத்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
மூன்று பேரின் பெயரையும் அச்சிட்டு திருமணப் பத்திரிகை உறவினர்களுக்கு அளிக்கப்பட்டு பல நூறுபேர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


