புது தில்லி: இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேர்தலுக்கான மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்கள் தேர்தல் தொடர்பான பணிகளை நிர்வகிப்பது மற்றும் ஒருங்கிணைப்பதற்காக மேலிடப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரி மேலிடப் பார்வையாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, எம்.எம்.பள்ளம் ராஜு மற்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ரெளத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கோவா முன்னாள் முதல்வர் லுசினோ ஃபெலிரோ, கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஷ்வரா ஆகியோருக்கு கேரள மாநில மேலிடப் பார்வையாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்துக்கு முன்னாள் எம்.பி. ஹரிபிரசாத், ஜார்க்கண்ட் மாநில எம்எல்ஏ ஆலம்கீர் ஆலம், பஞ்சாப் கல்வியமைச்சர் விஜய் இந்தர் சிங்லா ஆகியோரும், அஸ்ஸாம் மாநிலத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், பிகார் எம்எல்ஏ ஷகீல் அகமது கான் ஆகியோர் மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

