புது தில்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான 6-ஆவது சுற்று ஏலம், வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.
இதுதொடா்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
2,251.25 மெகா ஹொ்ட்ஸ் அலைவரிசையில் வரும் 700, 800, 900, 2,100, 2,300, 2,500 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த அலைக்கற்றைகளின் அடிப்படை விலை ரூ.3.92 லட்சம் கோடியாகும்.
ஏலத்துக்கு முந்தைய கூட்டம், வரும் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்வதற்கான கடைசி தேதி, வரும் 28-ஆம் தேதியாகும்.
ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்கும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 24-இல் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து, ஏல நடவடிக்கை, வரும் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


