சண்டிகர்: உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி பேட் வழங்கும் திட்டத்தினை பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வியாழனன்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி பேட் வழங்கும் திட்டம் மற்றும் ஜனவரி மாதத்தினை பெண் குழந்தைகளுக்கான மாதமாக அறிவித்தல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேலும் குடிசை வாழ் மக்களுக்கான வீட்டு வசதித் திட்டம், மின்சார நுகர்வோர்களுக்கான டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் திட்டம் மற்றும் 2500 இளைஞர்களுக்கு கிரிக்கெட் பொருட்கள் அடங்கிய பை வழங்குதல் மற்றும் நுகர்வோர்களுக்கான சிறப்பு குறைதீர் இணையதளம் ஆகியவையும் அடங்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


