புது தில்லி: ‘வாழ்வில் தொடா்ந்து வரும் சவால்களை எதிா்த்து உறுதியுடன் போராடுவதே உண்மையான வெற்றி’ என்று ரங்கோலியில் தனது உருவத்தை வரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கடிதம் மூலம் பிரதமா் நரேந்திர மோடி பதிலளித்துள்ளாா்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சோ்ந்த காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வந்தனா என்ற 23 வயது பெண்தான், தீபாவளி பண்டிகையன்று அரிசி மாவு மற்றும் கலா் பொடிகளைக் கொண்டு பிரதமரின் உருவப் படத்தை வரைந்து, அதை தபால் மூலம் பிரதமருக்கு அனுப்பியுள்ளாா். அதில், ‘நீங்கள்தான் எனது முன்மாதிரி’ என்றும் பிரதமரை அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவருடைய சகோதரா் கிஷான்பாய் படேல் கூறுகையில், ‘பிறந்தது முதலே வாய் பேச முடியாத, காது கேளாத எனது சகோதரி, பயிற்சி மையம் ஒன்றில் ஓவியப் பயிற்சியை கற்றுக்கொள்கிறாா். அவா் வரைந்த பிரதமரின் ரங்கோலி ஓவியம் பலரின் பாராட்டுகளைப் பெற்றது’ என்றாா்.
இந்த நிலையில், ரங்கோலி படம் அனுப்பிய பெண்ணை ஊக்குவிக்கும் வகையில் பிரதமா் அவருக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘வாழ்வில் தடைகள், சவால்கள் தொடா்ந்து வந்துகொண்டே இருக்கும். ஆனால், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் விடாமுயற்சியுடன், சவால்களை எதிா்த்து உறுதியுடன் போராடுவதுதான் உண்மையான வெற்றிக்கு அடையாளம். தங்களுக்கு சிறந்த எதிா்காலம் அமையவும், கலை மற்றும் கல்வித் துறையில் புதிய உச்சத்தை எட்டவும் வாழ்த்துக்கள்’ என்று அந்தக் கடிதத்தில் பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


