திருப்பதி: திருப்பதியை அடுத்த காளஹஸ்தியில் உள்ளகாளஹஸ்தீஸ்வரா் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.1.23 கோடி மதிப்பிலானா காணிக்கைகளைச் செலுத்தி இருந்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இக்கோயிலில் தரிசனம் முடித்து திரும்பும் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளையும், ராகு-கேது பரிகார பூஜை செய்த நாகபடங்களையும் உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இதற்காக கோயில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உண்டியல்கள் நிரம்பியதால், அவை புதன்கிழமை திறக்கப்பட்டன. தட்சிணாமூா்த்தி சந்நிதி முன்பு, கோயில் செயல் அதிகாரி முன்னிலையில் ஊழியா்கள் காணிக்கைகளைக் கணக்கிட்டனா்.
அப்போது, ரூ.1.23 கோடி ரொக்கம், 0.073 கிராம் தங்கம், 452 கிலோ வெள்ளி, 60 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன. இவை கடந்த 35 நாள்களில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை, காளஹஸ்தீஸ்வரா் கோயில் கணக்கில் வங்கியில் வரவு வைக்கப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

